கல்முனை சாஹிறாவின் அதிபருக்கு, பழைய மாணவர் சங்க செயலாளரின் அதிரடி பதில்!!!


(கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க பதில் செயலாளராக விளையாட்டு உத்தியோகத்தர் றிபாஸ் தெரிவு! என்ற தலைப்பில், அதிபர் எமது ஊடகத்துக்கு வழங்கிய செய்தியை மையமாக வைத்து வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி என். ஆரிப் அவர்கள் அனுப்பியுள்ள பதிலை இங்கு இணைத்துள்ளோம்.) 
ல்முனை சாஹிறா கல்லூரியின் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக்கிளை இல்லாமலாக்கப்பட்டதற்கும், நடப்பு ஆண்டிற்கான பழைய மாணவர் சங்கம் செயற்பட முடியாமல் போனதற்கும் முழுக்க முழுக்க பாடசாலையின் தற்போதைய அதிபரே காரணம்.

இதனை விலாவாரியாக விளக்குகின்ற போது அது பாடசாலையின் நற்பெயருக்கு களங்கத்தை உண்டாக்கும் என்ற அடிப்படையில் ஒரு பொறுப்புள்ளவன் என்ற காரணத்தினால் நான் அதனை விரும்பவில்லை.

அதிபரின் பக்கமிருக்கின்ற பிழைகளை ஒரு சில சுயநலவாதிகளின் வற்புறுத்தலினால் மறைத்து என்னை பிழையாக காட்டி, ஒரு பொறுப்பான அதிபர் என்பதை மறந்தவராய் அறிக்கை விட்டிருப்பது என்னையும் உண்மைகளை வெளிப்படுத்துங்கள் என்று தூண்டுகின்ற பொறுப்பற்ற செயலாகவே பார்க்க முடிகிறது.
எனவே, பாடசாலையின் அதிபர் தான் வெளியிட்ட அறிக்கையினை பொறுப்பான முறையில் மீளாய்வு செய்யாவிடின், அவரது நியமனத்திலிருந்து இதுவரை பழைய மாணவர் சங்கம் மற்றும் அதன் கொழும்புக் கிளையுடன் எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை ஒரு அறிக்கையாக வெளியிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

அது என்னை நியாயப்படுத்துவதற்காக அல்ல. மாறாக நடந்த உண்மைகளை எல்லோரும் அறியவேண்டும் என்பதற்காகவே இருக்கும்.

வைத்திய கலாநிதி என். ஆரிப்
செயலாளர்
பழைய மாணவர் சங்கம்
சாஹிறா கல்லூரி, கல்முனை
 

செய்தி
http://www.importmirror.com/2018/04/blog-post_64.html



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -