பட்டிருப்பு தேசிய பாடசாலை,வரலாற்றில் பெரும் சாதனை!!!


எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
ண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பட்டிருப்பு தேசிய பாடசாலை,களுவாஞ்சிகுடியில் 11 மாணவர்கள் 9 பாடங்களிலும் ” ஏ ” சித்திபெற்று பாடசாலை வரலாற்றில் பெரும் சாதனை புரிந்துள்ளனர்.

ஆ.லோஷனன், ச.டிகானா, வி.குவீனா ,நி.கிருஷிகன், பி.விசாகரி, ம.மதுஷனன் ,ந.கோமிக்கா, த.தினோஜன், சு.தரணியா ,ஜெ.யேனுஷன், ம.மதிபன் ஆகியோர் 9 பாடங்களிலும் ” ஏ ” சித்தியும் 14 மாணவர்கள் 8 பாடங்களிலும் 5 மாணவர்கள் 7 பாடங்களிலும் ” ஏ ” சித்தி பெற்றுள்ளதுடன் பெரும் தொகையிலான மாணவர்கள் உயர்தரப் பிரிவில் கல்வி பயில்வதற்கும் தகுதி பெற்றுள்ளனர்.

சித்தியடைந்த மாணவர்களுக்கும் கற்பித்த சகல ஆசிரியர்களுக்கும் பகுதித்தலைவருக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா, பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,கல்விசாரா உத்தியோஸ்தர்கள் ,இணைந்த அபிவிருத்தி உத்தியோஸ்தர்கள், பாடசாலை பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்தி சபை பிரதிநிதிகள், நலன் விரும்பிகள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை தனது நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ள நிலையில் இந்த பரீட்சை முடிவு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளமை மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு நிகழ்வாகுமென பாடசாலை அதிபர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -