நேற்று 07.04.2018 காலை 10.30 மணியளவில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினூடாக பாலைக்குளி வட்டாரத்தில் போட்டியிட்டு முசலி பிரதேச சபையின் உறுப்பினராக தெரிவாகி உள்ள சகோதரர் சேகு சுல்தான் முகம்மது ஜமீல் அவர்களின் சத்திய பிரமாணமும் கெளரவிப்பு நிகழ்வும் மிக சிறப்பாக பாலைக்குளி ஹைராத் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.
இதில் பல கட்சிகளின் பிரமுகர்களும், பாலைக்குளி, மறிச்சுக்கட்டி, முள்ளிக்குளம் கரடிக்குளி மற்றும் கொண்டச்சி ஆகிய கிராமங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் கட்சியின் உயர் பீட உறுப்பினரும், வட மாகாண இணைப்பாளருமான சகோதரர் முஜிபுர்ரஹ்மான் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பிரதிநிதி. முசலி பிரதேச ஏனைய வேற்பாளர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்த வைபவத்தின் போது பாலர் பாடசாலைகள், விளையாட்டு கழகங்கள் போன்றவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது. அஹதிய்யா, பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் விளையாட்டு வீரர்களுக்கான சீருடைகளும் உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இது சமூக சேவைக்கான ஒரு நல்ல முன்மாதிரிமிக்க செயற்பாடாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -