ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற வேண் ஒன்று வி பத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு வீதியின் குயில்வத்தைபகுதியிலே 18.06.2018 காலை 7.15 மணியளவில் பாதையை விட்டு விலகி தேயிலை மலையில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது
அட்டனிலுள்ளை ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற போது சீரற்ற கால நிலையினால் பாதையில் காணப்பட்ட வலுக்கல் தன்மையினால் வலுக்குச்சின்று விபத்து இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துடன் வேணில் பயணித்தவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லையென்றும் வேண்சாரதி காயமடைந்து வட்டவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணையை அட்டன் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.