அரிசிமலை புனித பூமிக்குறிய காணியை உடனடியாக ஒதுக்கவும் கிழக்கு ஆளுநர் பணிப்புரை

அப்துல்சலாம் யாசீம்-
புல்மோட்டை அரிசிமலை புனித பூமிக்குறிய காணியை உடனடியாக அடையாளம் கண்டு ஒதுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம பணிப்புரை விடுத்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை அரிசிமலை புராதன விகாரைக்கு சொந்தமான தொல்பொருள் சின்னங்கள் அடங்கிய பிரதேசத்தை அடையாளங்காணலும் அவ்விகாரைக்குறிய காணிகளை அடையாளப்படுத்தி நில அளவை செய்தல் தொடர்பான விஷேட கூட்டம் கடந்த வௌ்ளிக்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அக்கலந்துரையாடலின் போதே ஆளுநர் இப்பணிப்புரையை விடுத்தார்.

அத்துடன் இக்கலந்துறையாடலின் போது அப்பிரதேசத்தில்
குடியிருக்கின்ற மக்களுக்கு எதுவித பாதிப்புக்களும் வராத விதத்தில் அரிசிமலை விகாரையின் புனித பூமிக்குறிய காணிகளை தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரனையுடன் எல்லைக்கல் இட்டு அதனை நில அளவை திணைக்களத்தினால் அளவீடு செய்யுமாறும் பணித்துள்ளார்.
இக்கலந்துறையாடலின் போது மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார மாகாண காணி ஆணையாளர் டி.டி.அனுர தர்மதாஷ சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகர் திரு.ஜனாப் மற்றும் குச்சவௌி பிரதேச செயலாளர் பொன்னம்பலம் தனேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -