அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
இன்று உலகின் பல பாகங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பல்வேறு வகையிலும் நசுக்கப்பட்டு வருகின்றனர்.
அரபு, முஸ்லிம் நாடுகளில் ஏற்படுகின்ற உள்ளக முரண்பாடுகள் மற்றும் போராட்டங்களை மேற்குலக நாடுகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரபு, முஸ்லிம் நாடுகளுள் ஊடுருவி இஸ்லாமிய உலகின் பலத்தை அழித்தொழிக்கும் சதிகளை அரங்கேற்றி வருகின்றன.
அதேவேளை முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற பல நாடுகளில் முஸ்லிம்களின் இருப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலங்களில் இலங்கையிலும் முஸ்லிம்கள் கல்வி, கலாசார, பொருளாதார துறைகளில் நசுக்கப்பட்டத்தை மறந்து விட முடியாது. எமது நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அத்தகையதொரு கொடூர ஆட்சி மீண்டும் தலைதூக்காத்திருக்க இப்புனிதத் திருநாளில் பிரார்த்திப்போம்.
ஆகையினால் ஹஜ் எமக்கு கற்றுத்தருகின்ற பேதமற்ற ஐக்கியம், சமத்துவம் எனும் கோட்பாட்டை அடியொற்றி அரசியல் மற்றும் மார்க்க, இயக்க கொள்கை வேறுபாடுகளைக் களைந்து தேசிய ரீதீலும் உலகளாவிய ரீதியிலும் முஸ்லிம் உம்மத் முழுமையாக ஒற்றுமைப்பட்டு- பலமடைவதற்கு உறுதி பூணுவோம். ஈத்முபாரக்.
