முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி


லகளாவிய ரீதியில் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியச் சகோதரர்களுக்கும் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றேன்.

இஸ்லாமிய வரலாறு மிக நீண்டது. தியாகங்களாலும், இரத்தத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட இந்த மார்க்கம் வரலாறு நெடுகிலும் தியாகங்களினாலேயே வளர்க்கப்பட்டு இருக்கிறது. பொறுமையினையும் இணைந்து போதலையும் சொல்லித் தருகின்ற இஸ்லாம் வாழ்வின் நிலையாமை பற்றியும் கூறாமல் இல்லை.

இப்ராஹிம் (அலை) அவர்களின் மனிதத்துவத்திற்கு கட்டுப்பட முடியாத பல மடங்கு பெரிதான பொறுமையும், இஸ்மாயில்(அலை) அவர்களின் ஈடு இனையற்ற இணைந்து போதலும், அன்னை ஹாஜராவின் சோதனைக்குட்படுத்தப்பட்ட தாய்மை உணர்வும் நமக்கெல்லாம் படிப்பினைகள். துயரங்கள் என்பதும் இழப்புகள் என்பதும் நமக்கு பழகிப்போனவை.
அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் என்ற தக்பீர் முழக்கம் நமக்கு இறைகட்டளை, வேதம், வாழ்வு மாற்றங்களுக்கான ஒரே வழி. எனவே, இந்தத் தியாகத் திருநாள் புனித ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தில் மனைகள் தோறும் மகிழ்ச்சியோடும், கண்ணீரோடும் வாழும் எல்லா முஸ்லிம்களுக்கும் எனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -