காத்தான்குடி மட்/மம/அஷ் ஷுஹதா வித்தியாலத்தின் 15 வது வருட நிறைவை முன்னிட்டு 26.27,28 ஆகிய தினங்களில் பாடசாலை மாணவர்களின் சித்திரம் மற்றும் கைப்பணி புத்தாக்கக் கல்விக் கண்காட்சி பாடசாலையின் அதிபர் எம்.சீ.எம்.முனீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் எம்.ஏ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதூர்தீன் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களின் ஆக்கங்களை பார்வையிட்டனர்.
இவ் கண்காட்சி நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.