மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக்கழகத்தின் 45வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி-2018

பாறுக் ஷிஹான்-
ருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக்கழகத்தின் 45வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி-2018' நேற்று (27-09-2018) இரவு 07:00 மணிக்கு மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டுத் தொகுதியில் ஆரம்பமானது.

இதில் முதல் போட்டியில் கல்முனை லக்கி ஸ்டார் விளையாட்டு கழகத்தை எதிர்த்து கல்முனை பிரிலியண்ட் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்தப் போட்டியில் 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் கல்முனை பிரிலியண்ட் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.
அடுத்து இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டு கழகம் சவளைக்கடை அமீர் அலி விளையாட்டு கழகத்துடன் மோதியது.
இதில் 2-1 என்ற கோல் அடிப்படையில் மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டு கழகம் வெற்றியை தனதாக்கியது.
மேலும் இப்போட்டியின் முதல் சுற்றுவிளையாட்டு போட்டிக்கு நடுவர்களாக எம்.பி.எம் ரசிட் மற்றும் உதவி நடுவர்களாக ஜெ.பாதுசா சி.எம் அஸ்வர் மேலதிக நடுவர்களாக சி.எம் நஸார் ஆகியோரும் போட்டியின் ஆணையாளராக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி ஆசிரியர் எம்.எல் ஏ தாஹிரும் இரண்டாவது போட்டியின் நடுவர்களாக எஸ்.எம் உபைதீன் எஸ்.எல்.வை எஹியா அரபாத் ஏ.டபிள்யு றிகாஸ் ஆகியோருடன் மேலதிக நடுவராக எ.வாரீஸ் உட்பட இந்த போட்டிக்கு ஆணையாளராக அம்பாறை மாவட்ட சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஐ.எம் அமீர்அலி ஆகியோர் கடமையாற்றினர். கலந்து கொண்டிருந்தனர்.
போட்டியின் ஆரம்பத்தில் கிராஅத் ஓதப்பட்டு மறைந்த மர்ஹூம்களான எம்.எல் ஜமால்டின் (எஸ்.பி) எஸ்.எல் நுஹ்மான் ஏ.எம் றசீன் ஏ .சி.எம் அன்சார் கே.எம் இஸ்மாயில் ஏ.எம் பாறுக் எம்.எஸ் சாஜஹான் ஆகியோருக்கு மௌனப்பிராத்தினையோடு போட்டி ஆரம்பமானது

இந்நிகழ்வின் முதலாவது போட்டிக்கு பிரதம அதிதியாக பரக்கத் டெக்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் எம்.ஐ.ஏ பரீட் கௌரவ அதிதிகளாக முஹமட் மென்ஸ் பெயார் உரிமையாளர் ஜனாப் ஏ.எச்.எம் தஸ்மீம் பண்டாரவளை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்எம்.சரூக் ஆகியோரும்
இரண்டாவது போட்டிக்கு பிரதம விருந்தினராக மருதமுனை அதாவுல்லாஹ் கலர் மிக்ஸ் உரிமையாளர் ஏ.எம் றியாஸ் உட்பட கௌரவ அதிதிகளாக கல்முனை பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ் அன்லிமிட் உரிமையாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான ஏ.எஸ் எம் முர்சீத் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த போட்டி மின்னொளியில் சிறப்பாக நிறைவடைய அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளன உயரதிகாரிகள் மற்றும் ஈஸ்டன் யூத் விளையாட்டு கழக உறுப்பினர்கள் இணைந்து தத்தமது பங்களிப்பினை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -