கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களில் முதலாவது Lieutenant colonel (லெப்டினன்ட் கேர்னல் ) ஆக மர்ஹூம் தாவூத் சேர் அவர்களின் மகன் Major தாவூத் அனஸ் அஹ்மத் கடந்த சனிக்கிழமை பதவி உயர்வு பெற்றுள்ளார்.
சமூகத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து இறுதி மூச்சையும் சமூகத்திற்காய் அர்ப்பணித்த U.L. தாவூத் அவர்களின் பிள்ளைகளான அனஸ் மற்றும் நவாஸ் ஆகியோர் சிறுவயதிலேயே தந்தையை பிரிந்த துயருடன் நாட்டுக்காக உயிரைத் துச்சமாக மதித்து போராட இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டார்கள்.
இன்று பதவி உயர்வு பெற்றிருக்கும் அனஸ் அஹ்மத் அவர்கள் இராணுவத்தில் Second leutinant ஆக இணைந்து Major,Commanding officer போன்ற பதவி உயர்வுகளைப் பெற்றவராவார்.
இவ்வாறான முயற்சிகளுக்கு இவரது தியாகமே காரணமாகும்
சமூகத்திற்காக தன்னையும் தன் வாழ்க்கையும் தியாகம் செய்த தனது தந்தையின் இழப்பின் தாக்கமே இவரது உந்துசக்தியாக மாறியது
இதன் பிரதிபலிப்பே நாட்டுக்காக ,சமுதாயத்தின் பாதுகாப்புக்காக போராடி வெற்றிகண்டு உயர்பதவிகளை பெற்றுள்ளார்.