"பெருந் தலைவர் மர்ஹூம் M.H.M.அஷ்ரப் அவர்களின் 18ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு"


ஹஸ்பர் ஏ ஹலீம்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் மர்ஹீம் M.H.M.அஷ்ரப் சேர் அவர்கள் நம்மை விட்டு பிரிந்து 18 வருடங்கள் கடந்த நிலையிலும் அன்னார் அனைவரது உள்ளங்களிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்.

." இலங்கை முஸ்லீம் சமூகத்தின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்தி நமக்கான தனித்துவமிக்க அரசியல் அடையாளத்தை பெற்றுத்தந்த" நமது பெருந் தலைவர் அவர்களை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் அமைப்பாளர் , பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ M.S. தௌபீக் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது என்பதை நமது போராளிகள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.
எனவே இன்நிகழ்வில் நமது உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பிரதித் தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் போராளிகள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு நமது மாவட்ட தலைவர் கௌரவ M.S.தௌபீக் அவர்கள் வேண்டிக் கொள்கின்றார்கள்.

காலம் ; 16.09.2018
இடம் ; ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் மாவட்ட காரியாலயம்
நேரம் ; மாலை 4.30 மணி தொடக்கம்





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -