அல்ஹிதாயாவில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

அஷ்ரப் ஏ சமத்-
ல்ஹிதாயா பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் கொழும்பு- 10 அல்ஹிதாயா கல்லூரியில் கடந்த வருடம் க.பொ.த. சாதாரண தர, உயர் தரப் பரீட்சைகளில் திறமைச் சித்திகளுடன் சித்தியடைந்த மாணவ மாணவிகள் மற்றும் இவ்வருடம் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழாநேற்று சனிக்கிழமை (20.10.2018) மாலை கொழும்பு- 10, அல்ஹிதாயா கல்லூரியின் எம்.ஸீ. பஹார்தீன் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் எம்.என்.எம். நிஹார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியும் கௌரவ அதிதியாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானும் விஷேட அதிதிகளாக மேல் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.ஜே.எம். பாயிஸ், எம். அர்ஷாத் நிஸாம்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -