பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டு வந்து ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றால் ஜனாதிபதி பதவியை உடனடியாக துறந்து மக்களோடு சேர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்து உள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து அமைப்பாளர்களையும் இன்று புதன்கிழமை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு முக்கியமாக பேசியவை வருமாறு:
மஹிந்த ராஜபக்ஸவுடன் மீண்டும் இணைய வேண்டி வந்தது காலத்தின் கட்டாயம் ஆகும். நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தியே இத்தீர்மானத்தை நான் எடுத்தேன். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்களிலும் எதேச்சையாகவே நடந்தார். எனது உயிருக்கு உலை வைக்கின்ற சதி திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வந்து ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றால் அடுத்த கணத்தில் நான் ஜனாதிபதி பதவியை விட்டெறிந்து மக்களோடு மக்களாக போராட்டத்தில் ஈடுபடுவேன்.Tharme Tharmendra
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -