சியம்பலாங்கமுவ மக்களின் குடி நீர் பிரச்சினைக்கு தீர்வினைக் காண பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் களத்தில்...Update


அஸீம் கிலாப்தீன்-
சுமார் 150 இற்கும் அதிகமான சிங்கள குடும்பங்கள் வசிக்கின்ற, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமே கல்நாவ பிரதேச சபைக்கு உட்பட்ட சியம்பலாங்கமுவ கிராமமாகும். இக் கிராம மக்கள் பல வருடங்களாக குடி நீர் பிரச்சினையை எதிர் நோக்கி வந்துள்ளனர்.

இவர்களது பிரச்சினையை அறிந்த அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவருமான இஷாக் ரஹுமான் இப்பிரதேச மக்களின் குடி நீர் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் முகமாக ஒரு கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்நாவ பிரதேச சபை உறுப்பினர் ஹிஜாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
செழிப்பானதொரு இலங்கையை உருவாக்குவதற்கு இன, மத, கட்சி பேதங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றாய் கைகோர்க்க வேண்டும் என்றும், இன ஒற்றுமையை மேம்படுத்த தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் தான் மேற்கொள்வதாகவும் இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்தார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -