வவுனியா வெங்கலச் செட்டிகுளம் மக்கள் வங்கி கிளையின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று அதன் முகாமையாளர் ஏ.எச்.எம். அரூஸ் தலைமையில் வெகு விமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது.
குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக மக்கள் வங்கியின் வடமாகாணத்துக்கான பிரதி முகாமையாளர் எச்.எம்.யூ. ஹேரத் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாலர் பாடசாலைகளில் கல்வி பயிலும் 200க்கும் மேற்பட்ட சிறார்கள் கலந்துகொண்டதுடன், வர்ணம் தீட்டுதல், உருவங்களை பொருத்துதல், உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
மேலும் குறித்த நிகழ்வில் மக்கள் வங்கி கிளையில் சிறுவர் கணக்கில் பண வைப்பீடு செய்துள்ள சிறார்களின் மூவர் தெரிவுசெய்யப்பட்டு துவிச்சக்கர வண்டிகளும் பிரதம அதிதியினால் வழங்கப்பட்டதுடன் ஏனைய சிறார்களுக்கு ஊக்குவிப்பு பரிசில்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பாலர் பாடசாலை சிறார்கள், அதிதிகள், ஆசிரியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாலர் பாடசாலைகளில் கல்வி பயிலும் 200க்கும் மேற்பட்ட சிறார்கள் கலந்துகொண்டதுடன், வர்ணம் தீட்டுதல், உருவங்களை பொருத்துதல், உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
மேலும் குறித்த நிகழ்வில் மக்கள் வங்கி கிளையில் சிறுவர் கணக்கில் பண வைப்பீடு செய்துள்ள சிறார்களின் மூவர் தெரிவுசெய்யப்பட்டு துவிச்சக்கர வண்டிகளும் பிரதம அதிதியினால் வழங்கப்பட்டதுடன் ஏனைய சிறார்களுக்கு ஊக்குவிப்பு பரிசில்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பாலர் பாடசாலை சிறார்கள், அதிதிகள், ஆசிரியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.