இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு


நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மீண்டும் நியமிக்கப்பட்ட கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று வெள்ளிக்கிழமை தனது பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். 

பின்னர் அமைச்சின் செயலாளர்கள், அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சர், அமைச்சின் செயற்பாடுகளை வழமைபோன்று மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியிருந்தார். 

அத்துடன், ஏற்கனவே இந்த அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அவ்வாறே மேற்கொள்ளுமாறும் பணிப்புரை வழங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -