சீன -இலங்கை - இணை தயாரிப்பில் திரைப்படம்..



அஷ்ரப் ஏ சமத்-

சீன -இலங்கை - இணை தயாரிப்பில்" You Always With Me" எனும் திரைப்படத்தில் குறிப்பாக - கண் தானம், இலங்கையில் உள்ள கண் சேமிப்பு வங்கி, இத்திட்டத்தினை இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் அறிமுகப்படுத்திய டொக்டா் ஹர்சா டி சில்வாவின் கண் சத்திரசிகிச்சைத் திட்டம் பற்றிய கதைப்பாத்திரத்தினைக் இத் திரைப்படம் கொண்டுள்ளது. சீன நாடு சர்வதேச தரத்திலானதொரு சினிமா திரைப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளது.

இத் திறைப்படம் பற்றிய ஊடகவியலாளா் மாநாடு நேற்று(01.11.2018) இலங்கை மன்றக் கல்லுாாி,இலங்கை ருபவாஹினி ஆகிய நிறுவனங்களின் தலைவா் சட்டத்தரணி சரத் ஹோங்காங்கே தலைமையில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. பிரதம அதிதியாக கல்வி, உயா் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சா் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, சீன நாட்டின் சர்வதேச தயாரிப்பாளா் சிவ் யாளி இலங்கையின் இணைத் தயாரிப்பாளா் தேவேந்திர கோங்காங்கே ஆகியோா்களும் உரையாற்றினாா்கள்

இத் திரைப்படம் சீனாவில் 120 நாற்களும் இலங்கையில் கொழும்பு, கண்டி நுவரேலியாவில் 10 நாற்களாக பல்வேறு இயற்கை வளக் காட்சிகளை அடிப்படையாக்க கொண்டு சர்வதேச தரத்திற்கு இத் திரைப்படம் தயாரிக்க்பபட்டுள்ளது. இதற்காக 60 சர்வதேச பிரபல கமரா இயக்குணா்களும் நடிக நடிகைகளும் கடந்த 10 நாற்கள் இலங்கை வந்திருந்தனா். நேற்றுடன் இத் திரைப்படம் தயாரிப்பை பூரணப்படுத்தியுள்ளனா். சீனாவில் இத் திரைப்படம் முதன் முதலில் திரையிடப்படும்போது அங்கு 1.3 பில்லியன் சனத்தொகையினைக் கொண்ட நாட்டு மக்கள் இலங்கையையும் இம் மக்களது வாழ்க்கை முறை பௌத்த தர்ம சிததாந்தங்கள் பற்றியும் அறிந்து கொள்வாா்கள். .சீனா நாட்டின் 147 பங்கில் ஒரு பங்காகவே எமது இலங்கை நாடு விளங்குகின்றது.

சீனாவில் கண் பாா்வையற்றவா்கள் 100 மில்லியன் அதிகமானோா் பாா்வையற்றவா்கள் உள்ளனா். ஆனால் அந்த நாட்டில் கண் தாணம் செய்யும் முறை அங்கு அறிமுகப்படுத்தவில்லை அண்மைக்காலமாகவே இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தாம் மரண தருவாயில் இருக்கும் பொழுது பௌத்த தர்மத்திற்கேற்ப இன்னெருத்தருக்கு வாழ்வளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு்ளளது. இத் திரைப்படம் மூலம் இத் திட்டம் அங்கு மேலும் விரிவடையும் இத் திரைப்படம் திட்டத்திற்காக சீன ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி மற்றும் சீனாவில் உள்ள இலங்கைத் துாதுரகத்திற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் இதற்காக 1.3 மில்லியன் அமேரிக்க டொலா் செலவு செய்துள்ளதாகவும் இணைத் தயாாிப்பாளா் தேவேந்திர கோங்காங்கே கூறினாா்.

இத் திரைப்படம் பற்றி அமைச்சா் விஜயதாச ராஜபக்ச கூறுகையில் -

ஆசிய நாடுகளில் முதன் முதலில் இலங்கையிலேயே டொக்டா் ஹர்ச டி சில்வாவே கண் தானம் திட்டத்தினை அறிமுகப்படுத்தினாா். அத்துடன் கண் வைத்தியசாலை, கண் சேமிப்பு வங்கி போன்றவற்றையும் அவா் இலங்கையில் நிறுவினாா். இத் திட்டங்களை யப்பாண் சீனா, ஜேர்மன் போன்ற பல சர்வதேச நாடுகளும் இதனை அவா்கள் நாடுகளிலும் அறிமுப்படுத்தினாா்கள். தற்பொழுது சீன இத்திட்டத்தினை அவா்களது நாடுகளில் அறிமுப்படுத்தியுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் டொக்டா் ஹர்சா டி சில்வா இலங்கையில் இருந்து கண்களை வெளிநாடுகளுக்கு விற்கின்றாா் , கடத்துகின்றாா் என ஒரு தவறான செய்தியை பரப்பி அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது. விசாரனைக் கமிசனும் நியமிக்கப்பட்டது.

 ஹர்சா டி சில்வாவுக்கு சாா்பாக நானே சட்ட ஆலோசகராக நீதிமன்றில் இவ் வழக்குக்கு ஆஜராகி வாதாடி உண்மைகளை வெளிப்படுத்தினேன. என்றும் அமைச்சா் விஜயதாச கூறினாா். மரண தருவாயில் இருக்கும் ஒருவா் தனது விருப்பப்படி கண் வில்லைகளை பாா்வையற்ற ஒருவருக்கு தானம் செய்வதனால் விழிப்புணம் அற்றவா்கள் மீள கண்பாா்வை பெறுவதென்பது அவா்கள் வாழ்வில் மீள அவா்கள் உயிா் பெற்று எழுவது போன்ற தொரு புண்ணிய காரியமாகும்.

 இது பௌத்த மத்தின் ஒரு சித்தாந்தமாகும். இத் திரைப்படம் உலக நாடுகளில் திரையிடப்படும்போது இலங்கையின் இயற்கை அழகு, வளம் பற்றியும் சுற்றுலாத்துறைக்கு பாறியதொரு விளம்பரத்தினை இந் சீன நிறுவனம் செய்து தருகின்றது. அதற்காக இத திரைப்பட தயாரிப்பாளருக்கும் ்இலங்கை தயாரிப்பாளா் தேவேந்திர கோங்காங்கேவுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என அமைச்சா் அங்கு உரையாற்றினாா்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -