யாழில் கொட்டும் மழையிலும் மஹிந்தவுக்கு ஆதரவாக திரண்ட மக்கள்

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பேரணி ஒன்று இன்று(1) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணியானது வின்சன் திரையரங்கு வீதியில் இருந்து ஆரம்பமாகி கஸ்தூரியார் வீதியூடாக சென்று யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிறைவடைந்தது.
இதன் போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் மக்கள் ஆணைக்கு அனுமதி என்னும் தொனிப்பொருளில் பல்வேறு கருத்துக்களை ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
மேலும் குறித்த பேரணி கொட்டும் மழையில் இடம்பெற்றதுடன் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களும் முஸ்லீம் மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.












எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -