அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளராக இருந்த எம்.எஸ்.ஜெளபர் தான் சார்ந்திருந்த தேசிய காங்கிரஸில் இருந்து தனது சகோதரர் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையுடன் விலகிக் கொண்டமையினால் இப்பதவியை இராஜினாமாச் செய்திருந்தார்.

குறித்த வெற்றிடத்துக்கே இன்று பலத்த போட்டி நிகழ்ந்திருந்தாலும் அதிக உறுப்பினர்கள் எஸ்.எம்.எம்.ஹனீபாவுக்கே தங்களின் ஆதரவைத் தெரிவித்ததனால் இவர் நியமிக்கப் பட்டுள்ளார்.
இவர் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் ஆரம்பகால போராளியாகவும் பாலமுனைக்கான ஆரம்ப அமைப்பாளராகவும் இருந்து கட்சியின் வளர்ச்சிக்கு அதிக தொண்டாற்றியவர்.
அத்துடன் ஒரு நேர்மையான குணம் கொண்ட இவர் மக்களுடன் அதிக நெருக்கம்கொண்டவர். கல்வித்துறையில் அதிக நாட்டம் கொண்ட இவர் இரு தசாப்தங்களாக பாடசாலை அதிபராகக் கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.