திருகோணமலை மறைமாவட்ட ஆயர் திருகோணமலை ஜம்மியத்துல் உலமா சபை சந்திப்பு

அப்துல் சலாம் யாசீம்-

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிரிஸ்டியன் நோயல் இமானுவேல் ஆண்டகை அவர்களை அன்னாரின் ஆயர் இல்லத்தில் வைத்து 
திருகோணமலை மாவட்ட ஜம்யத்துல் உலமா சபை,
திருகோணமலை வர்த்தக சங்க சம்மேளனம்,
திருகோணமலை மாவட்ட அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் ஆகியன சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.

தன் போது நேற்று இடம் பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்த உறவுகளுக்கு தங்களது ஆழ்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும். இவ்வாறான மிலேச்சத்தனமான கொடூர தாக்குதலை மேற்கொண்டவருக்கெதிராக பாராபட்சமின்றி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இவ்வாரான சம்பவம் இனி ஒருபோதும் நடக்க இடமளிக்கக் கூடாது எனவும் தெரிவித்தனர். அத்தோடு திருகோணமலை மாவட்ட முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக உள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட ஜம்யத்துல் உலமா சபை சார்பாக கருத்து தெறிவித்தனர்.
.
திருகோணமலை மாவட்ட அனைத்து பள்ளிவாசல் சம்மேளன தலைவர் ஜனாப் வலீத் ஹாஜி கருத்து தெரிவிக்கயில்
எதிர்வரும் வெள்ளிக்கிழமை சகல பள்ளிவாசல்களிலும் ஜூம்மா பிரசங்கத்தின் போது தேசிய நல்லிணக்கம், சமூக ஒற்றுமை தொடர்பாக முன்னிலைப்படுத்தி பேச முடிவெடுத்துள்ளதாகவும், அனைத்து பள்ளிவாசல்களிலும் விசேட துவா பிரார்தனை ஒன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்கள்.
திருகோணமலை மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் கருத்து தெரிவிக்கையில் உயிர் நீத்த உள்ளங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு இன்றைய தினம் கடைகள் அனைத்தையும் மூடப்பட்டுள்ளதாகவும் எதிர் வரும் நாட்களில் தங்களால் இயலுமான உதவிகளை பாதிக்கபட்ட மக்களுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கருத்து தெரிவிக்கையில் இத்தகைய சந்தர்ப்பங்களில் தான் நாங்கள் அனைவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டும் எனவும். சமயத் தலைவர்கள் ஆகிய நாங்கள் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் எனவும், இதனை சில தீய சக்திகள் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி விடக்கூடாது எனவும், அத்துடன் விசேட ஊடக அறிக்கை ஒன்றினை ஓரிரு தினங்களில் வெளியிடஉள்ளதாகவும் மதிப்புக்குறிய ஆண்டகை தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -