சாய்ந்தமருதில் என்ன நடந்தது பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் தகவல்.

ல்முனை, சவலகடே, சம்மாந்துரை ஆகிய பிரதேசங்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இன்று (26) மாலை அப்பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டிருந்த போது பாதுகாப்புப் படையினருக்கும் குழுவொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் ஊரடங்கு அமுலில் உள்ள போது பொது மக்கள் வெளியில் கூடியிருப்பதைத் தவிர்ந்து கொள்ளுமாறும், வீடுகளில் இருக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கேட்டுக் கொண்டார்.

அங்கு குண்டு வெடித்ததா? அல்லது தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்பட்டதா? என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவியதற்கு,

அது குறித்து இதுவரை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அப்பிரதேசத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -