வாகன ஹோர்ன்கள் மற்றும் வெளிச்ச சமிக்ஞைகளை அப்புறப்படுத்த கால அவகாசம்


ஐ. ஏ. காதிர் கான்-
க்களுக்குத் தொல்லை கொடுக்கும் வகையில் அதிக இரைச்சலுடன் மற்றும் பயத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டவிரோத வாகன ஹோன்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மோட்டார் வாகனங்களில் வெளிச்சம் சம்பந்தமான விதிமுறைகளை மீறும் வகையிலான கருவிகளைப் பொருத்தியவர்களுக்கு எதிராகவும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.
இத்தகைய சட்டவிரோத உபகரணங்களை அப்புறப்படுத்த மூன்று மாத காலம் வரையிலான கால அவகாசம் வழங்கப்படும் என, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இப்புதிய சட்டங்கள், ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும்
சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -