முபாற‌க் அப்துல் ம‌ஜீத் ம‌த‌னியின் பதிவிலிருந்து...


நான் அறிந்த‌ வ‌ரை அமைதியான‌ ஒரு நாட்டில் முஸ்லிம்க‌ள் உல‌கில் எங்கும் இப்ப‌டியொரு அநாக‌ரீக‌ தாக்குத‌லை ந‌ட‌த்திய‌தாக‌ நான் காண‌வில்லை. அதிலும் ஒரு சிறிய‌ குழு இந்த‌ள‌விற்கு திட்ட‌மிட்டு ஒரே நாளில் செய்ய‌ முடியாது. அதுவும் ஒரு ம‌த‌ போத‌க‌ரால் சிறுபான்மை நாட்டில் முடிய‌வே முடியாது. அந்த‌ள‌வு மூளை சாலிக‌ள் இல‌ங்கை முஸ்லிம்க‌ள் இருப்ப‌தாக‌ எண்ண‌ முடிய‌வில்லை.
இத‌ற்காக‌ ப‌ண‌ம், ம‌னித‌ வ‌ள‌ம், மூளைத்திற‌ண் என்ப‌ன‌ வேண்டும். உண‌ர்ச்சிவ‌ச‌ப்ப‌ட்டு பேசும் ஒரு மௌல‌வியால் இந்த‌ள‌வு திட்ட‌மிட‌ முடியாது. இத‌ன் பின்னால் வேறு ச‌தி இருக்க‌லாம். அர‌சு நினைத்தால் நிச்ச‌ய‌ம் குற்ற‌வாளிக‌ள் தெரிய‌ வ‌ரும்.
முஸ்லிம்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் மோதிக்கொள்வார்க‌ள். ஷீயாவும் அப்ப‌டிதான் சுன்னீக்க‌ளும்தான். ஆனால் அந்நிய‌வ‌ர்க‌ளுக்கெதிராக‌ இப்ப‌டியொரு தாக்குத‌லை இந்த‌ நூற்றாண்டில் செய்த‌தில்லை. ஈரானும் ஈராகும் ச‌ண்டை பிடித்த‌தே த‌விர‌ ஈரானும் இந்தியாவும் ச‌ண்டை பிடிக்க‌வில்லை. ச‌வூதியும் எம‌னும் சண்டையே த‌விர‌ ச‌வூதியும் பிரான்சும் ச‌ண்டை பிடித்த‌தில்லை.
நிச்ச‌ய‌மாக‌ இத‌ன் பின்னால் ச‌தி உள்ள‌து. குற்ற‌வாளிக‌ள் த‌ப்பிப்ப‌த‌ற்காக‌ இதை முஸ்லிம் தீவிர‌வாத‌த்தின் ப‌க்க‌ம் திசை திருப்புவ‌தாக‌வும் இருக்க‌லாம். அமைச்ச‌ர் ஹ‌ரீன் பெர்னான்டோவின் த‌ந்தைக்கு முன் கூட்டியே தெரியும் என்றால் அர‌சுக்கும் தெரிந்துள்ள‌து.

அமைதியாக இருப்போம். ச‌மாதான‌த்துக்காக அனைவ‌ரும் பிரார்த்திப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -