கிண்ணியாவில் உள்ள தனியார் கல்வி நிலையங்களை மறு அறிவித்தல் வரும் வரை மூடுமாறு கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் கட்டளை பிறப்பித்துள்ளார்.
இதற்கான அறிவித்தலை இன்று (22) திங்கட் கிழமை கிண்ணியாவில் உள்ள சகல பள்ளிவாயல்களிலும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது .
நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ் நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொது நிகழ்ச்சிகள், மைதான விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட சகல விடயங்களிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுமாறும் கடிதம் மூலமாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரும் வரை கிண்ணியா நகர சபையின் சட்ட திட்டங்களை மதித்து நடக்குமாறும் மேலும் குறித்த அறிவித்தல் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.