உயிர்த்தஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களில் மரணித்த உறவுகளுக்காக காரைதீவில் இன்றும் (23)கடையடைப்புச்செய்து பூரண துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டது.
வீதியெங்கும் கறுப்பு வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன. ஆங்காங்கே பதாதைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன.
காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் ஒலிபெருக்கிவாயிலாக விடுத்த வேண்டுகோளைஏற்று காரைதீவில் சகல கடைகளும் மூடப்பட்டதுடன் வெள்ளைக்கொடி கறுப்புக்கொடிகளும் பறக்கவிடப்பட்டன. நேற்று பாரிய அஞ்சலிநிகழ்வும் நடைபெற்றது.
காரைதீவு தபாலகம் பிரதேசசபை சுகாதார அலுவலகம் கலாசாரமண்டபம் உள்ளிட்ட அரசஅலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்தன.