குண்டு வெடிப்பில் உயிர் நீத்த உறவுகளுக்கு அட்டன் கொட்டகலை
கிரிஸ்லஸ்பாம் தோட்டமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி...
கொழும்பில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு அட்டன் கொட்டகலை கிர்ஸ்லஸ்பாம் தோட்டமக்கள் 22.04.2019.திங்கள் கிழமை காலை குறித்த தோட்டபகுதியில் உள்ள மரியம்மாள் உருவலை சிலைக்கு முன்பாக பாதைகளை ஏந்தி மெழுகுவரத்தி ஏந்தி கண்ணீர் மல்க தமது அஞ்சலியை செலுத்தினர்
21.04.2019 ஞாயிற்றுகிழமை கொழும்பு பகுதியில் எட்டு பிரதேசத்தில்
இடம்பெற்ற குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்கள் இனிமேலும் எமது நாட்டில் இடம்பெற கூடாது என வழியுருத்தியும் மரணிித்த உறவுகளிின் ஆத்மா சாந்யடைய வேண்டியும் அஞ்சலி செலுத்தியதோடு
மலையகத்தில் ஏராளமான தோட்டபகுதிகளில் மக்கள் தொழிலுக்கு செல்லாது தமது அஞ்சலியை செலுத்துகின்றமை குறிப்பிடதக்கது.