யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் உள்ள தனியார் வாகன தரிப்பிடத்தில் இன்று செவ்வாக்கிழமை(23) அதிகாலை 6 மணியில் இருந்து 10.30 மணிவரைக்கும் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
பல மணி நேரமாக குறித்த கார் அங்கு உரிமையாளர் வருகைதராமல் தரித்து நின்றதால் அதில் வெடி குண்டு இருக்கலாம் என்று சந்தேகம் கொண்டவர்கள் இது குறித்த யாழ்.பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப் படையினருடன் வந்த பொலிஸார் குறித்த காரை சோதனை செய்தனர்.
குறித்த கார் சோதணை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது கார் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வந்த அது தன்னுடைய கார் என்பதை உறுதிப்படுத்தினார்.
இருப்பினும் கார் முழுவதையும் சோதனையிட்ட விசேட அதிரடிப் படையினர் காரில் வெடிகுண்டு இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர் உரிமையாளரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.