மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே மற்றும் இராஜாங்க அமைச்சர் எம்.சீ.பைசல் காசிம் ஆகியோரிற்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பு


எம்.எம்.ஜபீர்-
ம்பாரை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சிவில் நிர்வாக நடவடிக்கைகள் என்பனவற்றை முன்னெடுப்பது தொடர்பாக அம்பாரை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே மற்றும் இராஜாங்க அமைச்சர் எம்.சீ.பைசல் காசிம் ஆகியோரிற்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பு மல்வத்தை 24ஆவது இராணுவபடைபிரிவின் தலைமைகத்தில் நேற்று இடம்பெற்றது.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முஸ்லிம் மக்கள் என்றும் தயராகவுள்ளதாகவும் எமது மாவட்டத்தில் சிவில் நிர்வாகம் எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாதவகையில் முன்னெடுக்க பாதுப்புதரப்பினரின் பூரண ஒத்துழைப்பு அவசியம் எனவும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இடம்பெறும் விடயங்களுக்கு முஸ்லிம் மக்கள் எதிராகவும் இன்று காணப்படும் தீவிராவாத குழுவினரை முற்றாக நாட்டிலிருந்து ஒழிக்க முஸ்லிம் சமூகம் பாதுகாப்பு படையினருடன் பூரண ஒத்துழைப்பு வழங்குவர்கள் என நான் மக்கள் பிரதிநி என்ற வகையில் உறுதியளிப்பதாக இராஜாங்க அமைச்சர் எம்.சீ.பைசால் காசீம் இதன்போது தெரிவித்தார்.

இச்சந்திப்பில் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.எம்.எம்.அன்சார், அம்பாரை மாவட்ட நல்லிணக்குழுவின் உறுப்பினரும் உதவிக்கல்வி பணிப்பாளருமான எம்.ஏ.எம்.றசீன் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -