ஜித்தாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மருதமுனை உவைஸ் முகம்மட் றிகாஸ் உயிரிழப்பு


பி.எம்.எம்.ஏ.காதர்-
வூதி அரேபியா ஜித்தாவில் வெள்ளிக்கிழமை(19-04-2019)இடம்பெற்ற வாகன விபத்தில் மருதமுனையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான உவைஸ் முகம்மட் றிஹாஸ்(வயது 34)விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்
.இவருடன் பயணித்த மருதமுனையைச் சேர்ந்த பரீட் முகம்மட் சியாத்(வயது 36),றபீக் முகம்மட் றிகாஸ் ஆகியோர் ஆபதான நிலையில் ஜித்தா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உணவுப் பொருட்கள் வாங்கச் சென்ற போது பின்னால் வந்த வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்த உவைஸ் முகம்மட் றிஹாஸின் ஜனாஸா நல்லடக்கம் இன்று(22-04-2019)மாலை ஜித்தாவில் இடம்பெற்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -