மலையகத்தில் ஆண்டு 1 முதல் ஆண்டு 5 வரையான வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் - மாணவர்களின் வரவு குறைவு

க.கிஷாந்தன்-
டிப்படைவாதிகளின் அச்சுறுத்தலையடுத்து முப்படைகளின் தீவர சோதனை நடவடிக்கைகளின் பின்னர் ஆண்டு 1 முதல் ஆண்டு 5 வரையான வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் 13.05.2019 அன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் மலையகத்திலும் அனைத்து ஆரம்ப பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளது. ஆனால் மாணவர்களின் வரவு குறைவாகவே காணப்படுவதாக பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு பாடசாலை கல்வி நடவடிக்கைக்காக வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டு செல்லும் பைகளை பொலிஸார் சோதனை செய்த பிறகு தான் பாடசாலைக்குள் அனுமதித்துள்ளனர்.
பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொள்கின்றனர்.
தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்களின் இரண்டாம் தவணை பாடசாலை கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -