கல்முனையில் மாலை 5.00 மணிக்குப் பின்னர் டியூஷனுக்குத் தடை;


பதிவு செய்யப்படாத டியூட்டரிகள் மீது பொலிஸ் நடவடிக்கை 

அஸ்லம் எஸ்.மௌலானா-
ற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் இடம்பெறும் அனைத்து பிரத்தியேக வகுப்புகளும் (டியூஷன்) மாலை 5.00 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அறிவுறுத்தியுள்ளார்.
அதேவேளை கல்முனையில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் கல்முனை மாநகர சபையில் உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கமைவாக இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனியார் கல்வி நிலையங்களில் மாலை 5.00 மணிக்குப் பின்னர் வகுப்புகள் நடத்தப்படுவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வகுப்புகள் இடம்பெறுகின்ற பகல் நேரங்களில் கூட தமது கல்வி நிலையங்களின் பாதுகாப்பை அவற்றின் நடத்துனர்களும் ஆசிரியர்களும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் கல்முனை மாநகர சபையில் துரிதமாக பதிவு செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளமையால் அவற்றின் உரிமையாளர்கள் உடனடியாக அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் பதிவு செய்யப்படாத தனியார் கல்வி நிலையங்கள் யாவும் பொலிஸ் நடவடிக்கைக்குட்படுத்தப்படும் எனவும் முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -