52 மத ஸ்தலங்களின் புனரமைப்பிற்காக கம்பெரலிய திட்டத்தின்கீழ் இரண்டு கோடி ஐம்பது இலட்சம் ரூபா நிதி

ஏஎம் றிகாஸ்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் கடந்தகால போர்ச்சூழலினால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரதேசங்களில் அமைந்துள்ள 52 மத ஸ்தலங்களின் புனரமைப்பிற்காக கம்பெரலிய திட்டத்தின்கீழ் இரண்டு கோடி ஐம்பது இலட்சம் ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான நிகழ்வு ஏறாவூர் நகர் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

சர்வ மத பெரியார்கள் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களும் இங்கு பிரசன்னமாயிருந்தனர்.
சர்வ மத அனுஷ்டானத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.

இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின்போது பௌத்த விகாரைகள் , இந்துக்கோயில்கள் , கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாயல்கள் என 45 மத ஸ்தலங்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -