கிழக்கு மாகாண ACJU வசூல் மூலம் பெறப்படுகின்ற முழு தொகையினையும் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பது உகந்ததாக இருக்கும்

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனின் முகநூலிலிருந்து...
யிர்த்த ஞாயிறு தினத்தில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சகோதரர்கள் அதிகமானவர்கள் நடுத்தரக் குடும்பத்தினரும் நாளாந்த கூலித் தொழிலாளிகளும் ஆவார்கள். தற்கொலை குண்டுதாரிகள் எம்மை சார்ந்தவர்கள் அல்ல நாம் அவர்களை ஆதரிக்க வில்லை என கூறி எமது பொறுப்புகளிலிருந்து விலகி விட முடியாது. பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தில் பங்கு கொள்ள வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றது. அது மனித நேயம் மாத்திரமல்ல இஸ்லாமிய மார்க்கக் கடமையும் கூட. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் ஏற்பாடு செய்யப்படுகின்றன வசூலிப்பில் கலந்து கொண்டு முழு மனதுடன் எவ்வளவு அதிகமாக கொடுக்க முடியுமோ அவ்வாறு வழங்குவதற்கு முன் வரவேண்டும். ரமலான் மாதம் வாரி வழங்குவதற்கு உரிய மாதம் ஆகும். எமது தாராள மனப்பாங்கினை மற்றைய சமூகத்திற்கு உணர்த்துவதற்கு இது ஒரு தகுந்த சந்தர்ப்பம். ACJU இச்செயற்பாட்டினை அனைத்து சமூக இயக்கங்களினதும் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் .கிழக்கு மாகாண வசூல் மூலம் பெறப்படுகின்ற முழு தொகையினையும் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பது உகந்ததாக இருக்கும் இந்த முயற்சிக்கு அனைவரும் முழு மனதுடன் பங்குபற்றுவது ஒவ்வொருவர் மீதும் உள்ள மார்க்கக் கடமையாக இருக்கின்றது



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -