சாய்ந்தமருதில் "நாட்டுக்காக ஒன்றிணைவோம்" அபிவிருத்தி வேலைகள் அங்குரார்ப்பனம்

றியாத் ஏ. மஜீத்-
"நாட்டுக்காக ஒன்றிணைவோம்" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டில் சாய்ந்தமருது ஒராபிபாஷா குறுக்கு வீதிக்கு கொங்கிறீட் இடுதல் மற்றும் சாய்ந்தமருது - 01ம் பிரிவில் திரிய பியச வீடு நிர்மாணம் போன்ற அபிவிருத்தி வேலைகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (10) வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது - 01ம் பிரிவில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக தலைமைப்பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கிராம சேவக நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஜஃபர், உதவி முகாமையாளர் ஏ.எம்.எம்.றியாத், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எம். காலிதீன், ஏ.எம்.அபுல் ஹுதா, யூ.கே. சிராஜ், எம்.எம். சஹாப்தீன் உள்ளிட்ட பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -