தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருக்கு விளக்கமறியல்


தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுராதபுரம் கெக்கிராவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனேவல்பொல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் மே 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கல்முனை பகுதியில் இருந்து இருவருடன் குறித்த கட்சி பிரமுகர் கெக்கிராவை பகுதிக்கு சென்ற நிலையில் அங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு முரண்பாடான பதிலளித்தமை மற்றும் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர் வாகனம் ஒன்றை கைமாற்றம் செய்வதற்காக அங்கு சென்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கெக்கிராவை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -