ஜனாதிபதி சாய்ந்தமருது விஜயம்.


லங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மேன்மைதங்கிய மைத்திரிபால சிறிசேன அவர்கள் 2019.05.08 புதன்கிழமை சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுணர் கௌரவ. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலகம், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல், சாய்ந்தமருது மக்கள் பணிமனை மற்றும் சிவில் அமைப்புகளின் அனுசரனையுடன் 1000 இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் காலை 11.00 மணிக்கு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். இதன்போது தீவிரவாதிகள் தங்கியிருந்த நிலையில் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையின்போது தற்கொலை குண்டுகளை வெடிக்கச் செய்துகொண்ட இடமான சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்திற்கும் ஜனாதிபதி விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


தீவிரவாத செயற்பாடுகளை முறியடிப்பதில் சாய்ந்தமருது மக்கள் அரசிற்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் வழங்கிய ஒத்துழைப்பிற்காக ஜனாதிபதி அவர்கள் தமது நன்றிகளை தெரிவிற்கும் பொருட்டு சாய்ந்தமருது மண்ணுக்கு நேரடியாக விஜயம் செய்வதாக பேசப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -