தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என கோரி மஸ்கெலியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது

க.கிஷாந்தன்-
ஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமெனவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமெனவும்கோரி மஸ்கெலியா நகர மைதானத்தில் 12.05.2019 அன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஐக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அஞ்சலி கூட்டத்தில் மஸ்கெலியா பொலிஸார், மூவின மத தலைவர்கள், பாடசாலை அதிபர், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
இலங்கையில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும். தீவிரவாதம் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -