களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அனைத்து வைத்திய நிபுணர்களும் பதிலாளின்றி திடீர் இடமாற்றம்!


வைத்தியசாலை சமூகம் அதிர்ச்சி : கவலை !!
காரைதீவு நிருபர் சகா-
ளுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த அனைத்து வைத்திய நிபுணர்களும் பதிலாளின்றி இடமாற்றம் செய்வதற்காக சுகாதார அமைச்சி எடுத்துள்ள நடவடிக்கையானது எதிர்காலத்தில் வைத்திய சேவையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டு மக்கள் பாரிய சுகாதார பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடும் என வைத்தியசாலை சமூகம் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை சமூகத்தினர் கருத்து தெரிவிக்கையில்
பட்டிருப்பு தொகுதியில் ஒரு இலட்சத்தி இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழந்து வருகின்றனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அடிப்படை வசதிகளிலின்றி வறுமைக்கோட்டின் கீழே வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான மக்களை மையப்படுத்தியதாக அவர்களின் சுகதார பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு அமையப்பெற்தே களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையாகும்.
வைத்திய தேவைகருதி இந்த வைத்தியசாலையை விடுத்து வேறு வைத்தியசாலை செல்ல வேண்டுமாக இருந்தால்; பல கிலோ மீற்றர் தூரம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கே செல்ல வேண்டும். இந் நிலையினால் அப்பாவிமக்கள் அதிக கஷ்ரங்களுக்க முகங்கொடுக்க வேண்டியேற்படும். சுகாதார சேவை என்பது வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கே மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. இதனை செய்து கொடுக்க வேண்டிய தார்மீக கடமை அரசாங்கத்திற்கு உரியதாகும்

நாங்கள் இந்த வைத்தியசாலையானது மிக விரைவா முன்னெற்றம் காணும் என எதிர்பார்த்திருந்தோம். காரணம் இந்த நாட்டின் அதிகௌரவ ஜனாதிபதி அவர்களும் தற்போதைய சுகாதார அமைச்சர் அவர்களும் இணைந்தே இந்த வைத்தியசாலையில் அமையப்பெற்ற புதிய கட்டிடத்தினை அண்மையில் திறந்து வைத்தனர். வைத்தியசாலையின் நிலமையையும் நேரில் பார்வையிட்டு சென்றிருந்தனர்.
இதனாலதான் இந்த வைத்தியசாலையானது மேம்மேலும் வளர்சியடையும் என நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் நிலமை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. இருந்ததும் இழந்தாய் போற்றி என்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். இந்த அரசாங்கத்தினை அமைப்பதில் அதிகூடிய பங்களிப்பினை இத் தொகுதி மக்களே வழங்கியிருந்தனர். அவர்களுக்க இந்த அரசாங்கும் கொடுக்கும் நன்றிகடன் இதுதானா? என்ற கேள்வியினையும் அச்சமூகத்தினர் கேட்கின்றனர்.
எனவே குறித்த வைத்தியசாலைக்கு வைத்திய நிபுணர்களை நியமிப்பதற்காக சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்வதுடன் இது தொடர்பில் மாவட்டம் சார்ந்த பலதரப்பட்ட அரசியல்வாதிகளிடம் வைத்தியசாலை சமூகம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இங்கு சீரிய பணியாற்றிய வைத்தியஅத்தியட்சகர் டாக்டர்குண.சுகுணன் கல்முனைபிரதி சுகாதார சேவைப்பணிப்பாளராகப் பதவியுயர்வ பெற்றுச்சென்றகையோடு இந்நிபுணர் இடமாற்றம் இடம்பெற்றுள்ளது அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது.இது தொடர்பில் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லாதவிடத்து அனைவரும் ஒன்றிணைந்து எமது கோரிக்கை நிறைவேறும் வரை வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலையேற்படும். என அவர்கள் தெரிவித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -