வாகன விபத்து சம்பவம் ஒன்றில் அறுவர் படுகாயம்



காரைதீவு நிருபர் சகா-
ளுவாஞ்சிகுடி பிரதான வீதியில் (4) இடம் பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றில் அறுவர் படுகாயமடைந்ததுடன் கார் வண்டி ஒன்றும் முற்றாக சேதமடைந்துள்ளது.
கார்வண்டி மரத்துடன் மோதியதனாலையே குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
பாண்டிருப்பில் இருந்து மட்டக்களப்பில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு உணகொடுத்து விட்டு மீண்டும் தமது வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது கார் வண்டியானது பாதைவிட்டு விலகி அருகில் வீதி அருகில் இருந்த மரத்துடன் மோதியதனாலையே குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது

காரில் பயணித்த மூன்றுபெண்கள், மூன்றுஆண்கள் அடங்கலாக ஆறுபேரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஐந்து பேர் மாற்றப்பட்டுள்ளதாகவும் ஒருவர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் களுவாஞ்சிகுடி வைத்தியசாலை தவவலூடாக அறியமுடிகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -