வெடிபொருட்களை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கான கால அவகாசம்


னுமதிப்பத்திரமற்ற அல்லது சட்டவிரோத வெடிபொருட்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைகிறது.

அனுமதிப்பத்திரமற்ற அல்லது வேறு வகையில் சட்டவிரோத வெடிப் பொருட்களை வைத்திருப்போர் தொடர்பான தகவல்களை பொலிசாருக்கு வழங்குவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை நேற்று காலை 6 மணி தொடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரையில் மூன்று நாட்களுக்குள் தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளர்.

இதில் அனுமதிப்பத்திரமற்ற அல்லது வேறு வகையில் வெடிப் பொருட்களை வைத்திருப்போர் தொடர்பாகவும்இ அவர்கள் இருக்கும் இடங்கள் குறித்தும் அருகில் உள்ள பொலிஸ் நிலைய அதிகாரிக்கு அறிவிக்க முடியும். இவ்வாறான பொருட்களை பொலிசார் பொறுப்பேற்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கான அறிவுறுத்தல்களும் சகல பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -