அனுமதிப்பத்திரமற்ற அல்லது வேறு வகையில் சட்டவிரோத வெடிப் பொருட்களை வைத்திருப்போர் தொடர்பான தகவல்களை பொலிசாருக்கு வழங்குவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை நேற்று காலை 6 மணி தொடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரையில் மூன்று நாட்களுக்குள் தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளர்.
இதில் அனுமதிப்பத்திரமற்ற அல்லது வேறு வகையில் வெடிப் பொருட்களை வைத்திருப்போர் தொடர்பாகவும்இ அவர்கள் இருக்கும் இடங்கள் குறித்தும் அருகில் உள்ள பொலிஸ் நிலைய அதிகாரிக்கு அறிவிக்க முடியும். இவ்வாறான பொருட்களை பொலிசார் பொறுப்பேற்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கான அறிவுறுத்தல்களும் சகல பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.