கிழக்கு மாகாண சபையின் (PSDG) நிதி ஒதுக்கீட்டில் கல்முனை பிராந்திய மார்பு நோய்ச்சிகிச்சை நிலையத்தின் புதிய வைத்தியர் விடுதிக் கட்டிடம்

ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டது
எஸ்.அஷ்ரப்கான்-
கிழக்கு மாகாண சபையின் (PSDG) நிதி ஒதுக்கீட்டில் கல்முனை பிராந்திய மார்பு நோய்ச்சிகிச்சை நிலையத்தின் புதிய வைத்தியர் விடுதிக் கட்டிடம் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் நேற்று முன்தினம் (10) திறந்து வைக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய மார்பு நோய்ச்சிகிச்சை நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் சனுஸ் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கட்டிடத்தினை திறந்து வைத்தார்.

இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம்.ஹனீபா, சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், ஊரின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது நாட்டில் பயங்கரவாதக் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்காக எழுந்து நின்று இரண்டு நிமிடம் பிராத்தனையும் இடம்பெற்றது.
இதன்போது வைத்தியசாலை நிருவாகத்தினால் ஆளுநரின் சேவையினைப்பாராட்டி நினைவுச்சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -