முஸ்லீம் அமைச்சர்களில்லாத அவசர அமைச்சரவைக் கூட்டம்- ஊடகங்களுக்கு மறுப்பு

னாதிபதியின் தலைமையில் இன்று இரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டம் தொடர்பில், அதில் கலந்துகொள்ள வந்த எந்தவொரு அமைச்சரும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க மறுப்புத் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியினால் அவசரமாக கூட்டப்பட்ட இக்கூட்டம், இன்று இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகியதாகவும், இரவு 9.00 மணிக்கு நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இக்கூட்டத்திற்கு அமைச்சரவையிலுள்ள சகல அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், இராஜாங்க, பிரதி அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்ததாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

எந்தவொரு அமைச்சரும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ள நிலையில், இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க,

நடைபெற்றது அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று மாத்திரமே. இதில் சுமுகமான ஒரு கருத்துப் பரிமாறல் இடம்பெற்றது. என்னவிடயம் தொடர்பில் பேசப்பட்டது என்பது குறித்து விரைவில் தெரியவரும் எனவும் அவர் கூறினார்.டைலிசிலோன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -