இன்று சம்மாந்துறையில் பாற்குடபவனி.

 காரைதீவு  நிருபர் சகா-
ம்மாந்துறை கோரக்கோயில் ஸ்ரீ அகோரமாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு சடங்கு உற்சவத்தின் ஓரங்கமான பாற்குடபவனி இன்று(8) சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

தலைமைப்பூசகர் மு.ஜெகநாதன் ஜயா பூசகர் எஸ்.சின்னத்தம்பி தலைமையில் ஆலயபரிபாலனசபைத்தலைவர் ம.பாலசுப்பிரமணியம் செயலாளர் த.அழகுராஜா பொருளாளர் எஸ்.சசிகரன் உபயகாரர் தவிசாளர் கி.ஜெயசிறில் பங்கேற்புடன் நடைபெற்றது.

பாற்குடபவனி சம்மாந்துறை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து பவனி விசேடபூஜையுடன் ஆரம்பமாகியது.

நூற்றுக்கணக்கான பக்தைகள் பாற்குடம் சுமந்து 2கிலோமீற்றர் தூரம் ஊர்வலமாகவந்து காளிஅம்பாள் ஆலயத்தை வந்தடைந்தனர்.அங்கு விசேடபூஜை இடம்பெற்று கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தின் அன்னதானமும் இடம்பெற்றது.
நாளை மறுதினம் 10ஆம் திகதி அம்மனின் உள்வீதியுலாவும் 12ஆம் திகதி வெளிவீதியுலாவும் இடம்பெறும். எதிர்வரும் 17ஆம் திகதி தீமிதிப்புவைபவம் நடைபெறும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -