கல்முனை கே.டி.எம்.சி நெனசலவின் 10ம் ஆண்டு நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் விழாவும்

பாறுக் ஷிஹான்-
ல்முனை கே.டி.எம்.சி நெனசலவின் 10ம் ஆண்டு நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் விழாவும் ஞாயிற்றுக்கிழமை (14) வரவேற்பு மண்டபம் ஒன்றில் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.எம். ஹாஜாவின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்திற்குமான சபையின் தலைவர் வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.எல்.எம் நஸீர் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் ஒன்பது பாடநெறிகளை பூர்த்தி செய்த 220 மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கல்முனை பகுதியில் பிரசித்திபெற்ற பாடசாலைகளில் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர்களுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
அத்துடன் வருடா வருடம் ஊடகவியளாளர்களை கௌரவிக்கும் நிகழ்வின் இவ்வருடம் சிரேஸ்ட ஊடகவியளாளர் யூ. முகம்மட் இஸ்ஹாக் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.










எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -