போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கொழும்பில் படகுச் சேவை ஆரம்பம்

ஐ. ஏ. காதிர் கான்-

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், புறக்கோட்டையிலிருந்து கொம்பனித்தெரு - யூனியன் பிளேஸ் வரை படகுச் சேவையை ஆரம்பிக்க, காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதற்கமைய, இலங்கைக் கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பயணிகள் படகில் முதலாவது கண்காணிப்பு சுற்றுப்பயணத்தை, நகர்ப்புற மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கொண்டார்.

இந்தப் படகுச் சேவையை ஆரம்பிப்பதன் மூலம், புறக்கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸ் வரை 15 நிமிடங்களிலும் மிகக் குறைவான நேரத்தில் பயணிக்க முடியுமென்பதோடு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு இது ஒரு சிறந்த தீர்வாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -