ஓட்டமாவடியைச் சேர்ந்த யாகூப் குவைத்தில் மரணம்.




எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடிசைச் சேர்ந்த நபரொருவர் குவைத்தில் மரணமான சம்பவமொன்று இன்று (26) இடம்பெற்றுள்ளது.

குவைத் நாட்டில் சாரதியாக பணிபுரியும் ஓட்டமாவடி - 2ம் வட்டாரம் எம்.கே.வீதியைச் சேர்ந்த அபுசாலி யாகூப் (வயது 42) என்பவரே குவைத்தில் மரணமடைந்துள்ளார்.
உறவினர் ஒருவரின் அறையில் இருக்குப்போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான மரணமடைந்த குறித்த நபரின் உடல் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு உடலை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -