VOCABS எனும் ஆங்கில நூல் வெளியீட்டு நிகழ்வு

ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலக பிரிவை சேர்ந்த ஆசிரியர் எஸ்.எம்.இஸார் அவர்களால் எழுதப்பட்ட VOCABS எனும் ஆங்கில நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று (06) மூதூர் நத்வதுல் உலமா அறபிக் கல்லூரியில் இடம் பெற்றது
நூலாசிரியர் மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியில் அல் ஹாபில் மற்றும் மௌலவி பட்டம் பெற்றவர்.
ஆங்கிலத்தில் சிறந்த பெறுபேறுகள் பெற்று பேராதனை கல்வியியல் கல்லூரியில் ஆங்கிலத்தில் டிப்ளோமா பட்டம் பெற்று ஆசிரியராக கடமை புரிகின்றார்.
பின்னர் பேராதனை பல்கலைக்கழகத்தில் BA பட்டம் பெற்று பயிற்றப்பட்ட பட்டதாரியாக தற்போது கடமைபுரிந்து வருகின்றார்.

இவரது VOCABS என்ற நூல் ஆங்கிலம் கற்கும் தரம் 6- 11 வரையான மாணவர்களுக்கும்,ஆங்கிலம் கற்க ஆர்வமுள்ளவர்களுக்கும் மிகவும் பயனுள்ள நூலாகும்.
பிரதம அதிதியாக மூதூர் வலயக் கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜே.எம்.இக்பால்,மற்றும் ஆங்கில பிரதிக் கல்விப் பணிப்பாளர்,ஆசிரிய ஆலோசகர்களும் கலந்து சிறப்பித்தனர்.


Cont:S.M.Isar,0772395735





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -