சாய்ந்தமருது பிரதேச சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.வஹீல் உள்ளிட்ட தேசிய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சடையின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சடையின் தவிசாளரும் முன்னாள் கல்முனை மாநகர முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்து கொண்டு 20 பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,
பத்தாயிரம் இளைஞர்களுக்கு விரைவில் மடி கணனிகள் வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றேன். இதற்கான அனுமதியினை அமைச்சர் றிசாட் பதியுதீன் வழங்கியுள்ளார்.
இதன்மூலம் இளைஞர்களை இன்று பெருகி வரும் ஒன்லைன் வியாபாரத்தின் பால் வழிகாட்டல்களை வழங்கி அதற்காக தொழில் உபகரணமான மடி கணணிகளை அவர்களுக்கு வழங்கி நவீன உலகின் போட்டிச் சந்தையில் கூடுதலான வருமானங்களை பெறக்கூடியவாறு திட்டங்களை வகுத்துள்ளோம்.
பட்டதாரிகள் அரச தொழில்களை நம்பி தங்கள்து காலங்களை வீணடிக்காமல் சுயதொழில் முயற்சிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். இதற்கான வழிகாட்டல்கள், பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை எமது அதிகார சபை ஊடாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை எமது பிரதேச பட்டதாரிகள் பயன்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் நாடளாவிய ரீதியில் 2 லட்சம் சிறுகைத்தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்து ஒருவருக்கு தலா 1 லட்சம் ரூபா பெறுமதில் தொழில் உபகரணங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.