அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த புனித அன்னம்மாள்



க.கிஷாந்தன்-

ட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த புனித அன்னம்மாள் அவர்களின் வருடாந்த திருவிழாவும் திருச்சொரூப பவனியும்கொட்டும் மழையிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மத்திய மாகாண அதி வணக்கத்திற்குரிய ஆண்டகை வியாணி பர்னாண்டோ அவர்களின் தலைமையில் ஆரம்பமான இந்த திருவிழாமுதலில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு விசேட தேவ பிரார்த்தனையினை தொடர்ந்து, திருச்சொரூப ஊர்வலம் அட்டன் திருச்சிலுவைஆலயத்திலிருந்து புறப்பட்டு அட்டன் நகர் ஊடாக சென்று மீண்டும் ஆலயத்தினை சென்றடைந்தது.

இத்திருவிழாவினை முன்னிட்டு அட்டன் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியிருந்தனர்.

கடந்த 04 திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்த திருவிழாவில் நவ நாட்கள் பூஜைகள் நடைபெற்று திருவிழா நடைபெற்றது.

ஆலய பங்கு தந்தை நிவ்மன் பீரிஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த திருச்சொரூப பவனியில் கொட்டும் மழையினையும்பாராது சுமார் ஆயிரக்கணக்கான கிறிஸ்த்தவ பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த திருசொரூப ஊர்வலத்தில் கிறிஸ்த்தவ கீதங்கள் மற்றும் பேன்ட் வாத்தியங்கள், துதிப்பாடல்கள், ஆகியனவும் இடம்பெற்றன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -