களுவாஞ்சிகுடியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு



பாறுக் ஷிஹான்-

மிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு களுவாஞ்சிக்குடி இராசமானிக்கம் மண்டபத்தில் ஆரம்பமானது.

திங்கட்கிழமை(12) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெளிவுபடுத்தி உரையாற்றினார்.

அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏதும் செய்யவில்லை? தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுக்கு முட்டுக் கொடுக்கின்றதா? போன்ற பொய் உரைகளின் உண்மைத்தன்மை தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -